Friday 3rd of May 2024 07:46:49 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையில் கொரோனா தொற்று 2072 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்று 2072 ஆக அதிகரிப்பு!


இலங்கையில் இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களது மொத்த எண்ணிக்கை 2072 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினத்தில் 2069 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டிருந்த நிலையில் இன்று நண்பகல் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதை அடுத்து இலங்கையில் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளவர்களது எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

தற்போது 174 பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE